states

img

உ.பி:  17 வயது பெண் தந்தை உள்ளிட்ட 28 பேரால் பாலியல் பலாத்காரம்

உத்திரபிரதேச மாநிலத்தில் 17 வயது பெண் தந்தை உள்ளிட்ட 28 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
உத்திரபிரதேச மாநிலம் லலித்பூர் பகுதியில் 17 வயது பெண் தந்தை உள்ளிட்ட 28 பேரால் பல ஆண்டுகளாக  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.  பாதிக்கப்பட்ட பெண் 6ம் வகுப்பு படித்த போது ​​மகேஷ்புராவில் உள்ள வயல்வெளியில் அவரது தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு ஆபாச வீடியோக்களை பார்க்க வற்புறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து அவ்வப்போது விடுதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 
இந்த விவகாரத்தில் மாவட்டத் தலைவர், பகுஜன் சமாஜ்வாதி, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 28 பேர் மீது லலித்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;